Earn Money

இந்த காலகட்டத்தில் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே கவலை தங்களுடைய கணவருக்கு நல்ல வேலை வேண்டும் என்பது தான். இன்னும் சிலருக்கு வேலைக்கு செல்கிறார்கள் ஆனால் சரியான சம்பளம் கிடையாது என்று வருத்தப்படுபவர்களும் உண்டு.

இவை அனைத்திலும் விட மூன்றாவது ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களின் நிலைமை தான் மிகவும் மோசமானது. ஏனெனில் கணவர்மார்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பார்கள். இந்த குடும்பங்களின் நிலை தான் மிகவும் மோசமானதாக இருக்கும். அவர்களும் வேலைக்கு செல்லக் கூடாது என்று நினைப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனோ வேலைக்கு செல்லக் கூடிய வாய்ப்பே இருக்காது முயற்சி செய்தாலும் தட்டிக் கொண்டே செல்லும்.

இது எப்படி இருந்தாலும் கணவன் வேலைக்கு செல்லவில்லை அல்லது வருமானம் போதவில்லை என்றால் அந்த குடும்பம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நிலை மாறி கணவன்மார்கள் நல்ல முறையில் சம்பாதித்து குடும்பத்தை நல்ல முறையில் நடத்த மனைவிமார்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். ஆண்கள் கை நிறைய சம்பாதிக்க இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். அந்த நாளில் உங்களுக்கு சந்திராஷ்டம இருக்கக் கூடாது.

இந்த பரிகாரத்தை தொடங்கும் நேரத்தில் ராகு காலம் எமகண்டம் போன்றவை இல்லாதிருந்தாலே போதும். இந்த பரிகாரத்திற்கு அரசமரம் நிச்சயம் தேவை. அது கோவிலில் இருந்தாலும் சரி அல்லது வெளியில் இருந்தாலும் சரி செய்யலாம்.

இந்த பரிகாரத்திற்கு தேவையான அதேசமயம் முக்கியமான ஒன்று எண்ணெய் மட்டும் தான். இதற்கு ஐந்து எண்ணெய்கள் வாங்க வேண்டும் இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் சம அளவில் வாங்கி ஒரு பாட்டிலில் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அரச மரத்தடியில் இந்த ஐந்து எண்ணெயும் ஒன்றாக சேர்த்து அகல் விளக்கில் பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அந்த அரச மரத்தடியில் நீங்கள் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஈரம் படிந்த மண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து உங்கள் கணவர் நெற்றியில் தினமும் திலகமாக வைத்து விடுங்கள் போதும்.

இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய உடனே நல்ல மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் முதல் சம்பளம் வரும் வரை செய்யுங்கள். தொழில் செய்பவர்களாக இருந்தால் இதை தினமும் கூட செய்யலாம். இந்த பரிகாரம் செய்யும் வேளையில் வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு சிவ மகின்மா ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.